கரூர், ஜன. 28: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படும் மறுவாழ்வு இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திட வசதியாக கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் 18வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பெயர் பட்டியலில் பதிவு செய்து வாக்காளர் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜனவரி 31ம்தேதி வரை தாசில்தார் அலுவலகங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.