காவேரிப்பட்டணம், ஜன.28: காவேரிப்பட்டணத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராகேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அசோக்குமார், எம்எல்ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், சந்திரகாசன், அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஜெகன் நன்றி கூறினார்.