அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம்

அரூர், ஜன.28: தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க செயற்கூழு கூட்டம், அரூர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் பழனி தலைமை வகித்து பேசினார். அனைத்து அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், நலவாரிய அட்டை வழங்க வேண்டும்; நலவாரிய அட்டை பதிவிற்கு விஏஓ பரிந்துரையை ரத்து செய்ய பதிவு புதுப்பித்தல் அட்டையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் உண்ணாமலை, மாவட்ட துணை செயலாளர் சின்னப்பாப்பா, நிர்மலா, பெருமாள், ராமன், உமாராணி, சென்னி, ராமஜெயம், பழனிசாமி, மணிமேகலை, சொக்கலிங்கம், வெள்ளையம்மாள், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: