பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜன.28: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை: நாளை (29ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், கலெக்டர் அலுவலகம் அருகில், தர்மபுரி மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வேண்டி நடைபெறும் அறப்போராட்டம், கலெக்டரிடம் மனு வழங்கும் நிகழ்ச்சி மாநில துணைப்பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடக்கிறது. எனவே, பாமகவினர், வன்னியர் சங்கம், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், இளம்பெண்கள் சங்கம், பசுமைத் தாயகம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை, சமூக ஊடகப் பேரவை மற்றும் பாட்டாளி தொழிற் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: