சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

பென்னாகரம், ஜன.28: பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. இளநிலை பொறியாளர் தமிழரசு தலைமை வகித்தார். பேரணி பஸ் ஸ்டாண்ட், தாசில்தார் அலுவலகம், புறவழிச்சாலை வழியாகச் சென்று பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் ஹெல்மெட் அணிய வேண்டும், செல்போனில் பேசியபடி செல்லக்கூடாது, டூவீலரில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும், சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பேரணியில் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: