சாலை பாதுகாப்பு உறுதிமொழி

பாலக்கோடு, ஜன.28: சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டியில், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகள் ஹெல்மெட், சீல் பெல்ட் ஆகியவற்றை கட்டாயம் அணிய வேண்டும், அதிவேகமாகவும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற சாலைவிதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து காணொலி காட்சி மூலம் விபத்துகள் காண்பிக்கப்பட்டன. பின்னர், சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் முனுசாமி, அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். பஸ், லாரி மற்றும் ஆட்டோ டிரைவர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: