பப்பாளி ஏற்றிச்சென்ற டெம்போ கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயம்

நல்லம்பள்ளி, ஜன.28: சேலத்தில் இருந்து டெம்போ ஒன்று, பல்வேறு பகுதிகளிலிருந்து பப்பாளி பழங்களை ஏற்றிக்கொண்டு  சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. டெம்போவை திருப்பத்தூரை சேர்ந்த ராஜூ(24) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று மாலை, அதியமான்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஜீவாநகர் பிரிவு சாலை பக்கம் வந்த போது, எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி குறுக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறிய டெம்போ, டிப்பர் லாரி மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் டெம்போவில் இருந்த பப்பாளி பழங்கள் சாலையில் கொட்டியது. அதில் வந்த கூலி தொழிலாளர்கள் விக்னேஷ் (24), வெங்கடேசன் (31), மணிகண்டன் (27), கார்த்திக் (27), பரந்தாமன் (25), சங்கர் (24) ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த 8 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: