×

மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி இன்று தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன. 28: கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37-வது வார்டு தண்ணீர்பந்தல் ரோட்டில் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது, வெறும் 2 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. இதனால், அந்த வழியாக செல்லக்கூடிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,  தமிழக அரசு உடனடியாக இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவாக திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று (வியாழன்) மாலை 4 மணிக்கு பீளமேடு தண்ணீர்பந்தல் தொழில்நுட்ப பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில்,  கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்க உள்ளனர். இவ்வாறு கார்த்திக் எம்.எல்.ஏ. கூறினார்.

Tags : DMK ,Demonstration ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்