கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

சூலூர், ஜன. 28: சூலூர் அடுத்த நடுப்பாளையம் பகுதியில் சூலூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஜெகநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த ஒரு சரக்கு ஆட்டோவிற்கு  வடமாநில வாலிபர்கள் வந்துபோவது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்ற பீகாரைச் சேர்ந்த லவன்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: