×

19 பேருக்கு கொரோனா இரு பெண்கள் பலி

ஈரோடு, ஜன.28:ஈரோட்டில் நேற்று புதியதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து இதுவரை மொத்தம் 13,967 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மருத்துவமனைகளில் 168 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றினால் நேற்று ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்த 55 வயது பெண் மற்றும் அந்தியூரை சேர்ந்த 76 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து மாவட்டத்தில் இதுவரை 150 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Corona ,women ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...