சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன.28: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ், கோபி தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். கோட்ட செயலாளர்கள் அன்புசெல்வம், பாலமுருகன், ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் கோரிக்கை மனுக்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

Related Stories: