×

விருத்தாசலத்தில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்குபோட்டு சாவு

விருத்தாசலம், ஜன. 28:  விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் உமேஷ்(22). பி.இ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக இவரது பெற்றோர் இவரை திட்டியதாக
தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மொட்டை மாடியில் உள்ள அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த அவரது பெற்றோர் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சென்று உமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உமேஷின் தந்தை சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Engineering graduate ,Vriddhachalam ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு