×

ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் மாயம்

விருத்தாசலம், ஜன. 28:மங்கலம்பேட்டை அருகே உள்ள சித்தேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரமகுரு மனைவி காயத்ரி (21). கணவன், மனைவி இருவருக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்று ஒன்றரை வயதில் ரித்தீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவருக்கும் கடந்த சில தினங்களாக குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காயத்ரி தனது ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் மற்றும் பெற்றோர் காயத்ரியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரது வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் பரமகுரு கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : one ,
× RELATED தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை...