திருவெறும்பூர் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி

திருவெறும்பூர், ஜன.27: திருவெறும்பூர் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே உள்ள சோழியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வீரமணி(21), கல்லூரி மாணவர். இவரும், இவரது நண்பர் இலுப்பூர் நவம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும் தஞ்சை மாவட்டம் நடுகாவிரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு பைக்கில் மாத்தூர் ரவுண்டானா அருகே வந்துகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் வீரமணி அதே இடத்திலேயே பலியானார். தவலறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த சதீஷ்குமாரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீரமணியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விபத்து காரணமான காரை தேடி வருகின்றனர்.

Related Stories: