வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

திருச்சி, ஜன.27: புதுக்கோட்டை தந்தை பெரியார் நகர் நடு தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (23). இவர் சம்பவத்தன்று திருச்சி வந்து நண்பர் முஜிபுர்ரஹ்மான் என்பவருடன் டிவிஎஸ் ேடால்கேட் தஞ்சை சர்வீஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் முனீஸ்வரன்(22), ஆறுமுகம்(20) ஆகிய 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த கன்டோன்மென்ட் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: