ஒரத்தநாடு, ஜன.27: டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கோரிக்கையை நிறைவேற்ற கோரி நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், ஒரத்தநாட்டை அடுத்த தென்னமநாடு பைபாஸ் சாலையில் திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.