×

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

கும்பகோணம், ஜன.27: கும்பகோணத்தில் மதிமுக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கருத்தரங்கம் மற்றும் செயற்குழு கூட்டம் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில், நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்திட வேண்டும். கல்வியை மீண்டும் மாநில மாநில பட்டியலுக்கு மத்திய அரசு உடனே கொண்டு வர வேண்டும். தமிழக மாணவர்கள் படிப்பு செலவிற்காக வங்கியில் பெற்ற கடன்களை அனைத்தையும் மாநில அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தியும் வலைகளை அறுத்தும் மீனவர்களைக் கைது செய்தும் மீனவர்களை படுகொலை செய்தும் வருகின்ற இலங்கை அரசை வன்மையாக கண்டிப்பதோடு மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணாமல் இருக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதோடு மீனவர்கள் பிரச்னையில் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கும் தமிழக அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தஞ்சை மாவட்டத்தை பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதியாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : martyrs ,war ,
× RELATED ‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி