×

கலெக்டர் தகவல் வேனில் கடத்திய 960 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புதுக்கோட்டை, ஜன. 27: புதுக்கோட்டையில் வேனில் கடத்திய 960 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஏத்தநாடு வம்பாரப்பட்டி பகுதியில் குடிமைபொருள் வழங்கல் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை மறித்து சோதனை நடத்தியபோது 960 கிலோ ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் புதுக்கோட்டை மாவட்டம் அம்புராணி மேலத்தெருவை சேர்ந்த பெரியசாமி (50), பாண்டியராஜன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அரிசி கடத்த பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Collector Information Van ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு