×

பெரம்பலூரில் பரபரப்பு 72வது குடியரசு தினவிழா கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

பெரம்பலூர்,ஜன.27: பெரம்பலூரில் 72-வது குடியரசு தினத்தினை முன்னிட்டு கலெக்டர் வெங்கட பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72 வது குடியரசுதின விழா நேற்று நடைபெற்றது. எஸ்பி நிஷா பார்த்திபன், டிஆர்ஓ ராஜேந்திரன், சப்-கலெக்டர் பத்மஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கலெக்டர் வெ ங்கடபிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல் பட்ட 74 அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களும், சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக 23 போலீசாருக்கு தமிழக முதலமை ச்சர் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சக்திவேல், முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொ ண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுபாதேவி தேசிய கொடியை ஏற்றினர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி கருணா நிதி, மாவட்ட மகிளா நீதி மன்ற நீதிபதிகிரி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தன சேகரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவ ரும்(பொ), மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான வினோதா, சார்பு நீதிபதி ஷகிலா, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அசோக் பிரசாத், கருப்பசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், நீதி மன்ற மேலாளர்கள், அலுவ லர்கள் கலந்து கொண்டனர். இதேபோல பெரம்பலூர் மாவட்ட ஊர்க் காவல் படை அலுவலகத் தில் ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி ராம்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Tags : Perambalur ,Collector ,Republic Day ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...