விருதுநகர், ஜன. 27: விருதுநகர் பழைய பஸ்நிலையம் அருகில், மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடத்த தகுதியுள்ள ஒரே கட்சி அதிமுகதான். வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு அடித்தளமிட்டு மாணவர்களை திரட்டி இன்னுயிர் தந்தவர்கள் முன்னாள் துணை சபாநாயகர் விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, எல்.கணேசன் ஆகியோர் மொழிக்கான தங்களை வருத்தி, அதிமுகவில் இருந்து மறைந்தனர்.
தலைமைக்கழக பேச்சாளர் மதுரை பாண்டியன், திண்டுக்கல் குணசேகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் எம்எல்ஏ சந்திரபிரபா, அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கோகுலம்.எம்.தங்கராஜ், நகர செயலாளர் நைனார் முகம்மது, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், ராஜசேகர், ஒன்றிய தலைவர் சுமதி, மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.