×

உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்

கம்பம், ஜன. 27: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. உத்தமபாளையம் தாலுகாவில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த உதவித்தொகையை பெற்று வருகின்றனர். மாதந்தோறும் 5ம் தேதிக்குள் இந்த உதவித்தொகை வழங்கப்படும். ஆனால் இந்த மாதம் மாதமே முடியும் நிலையில் இதுவரை உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் யாருக்குமே உதவித்தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் அன்றாட செலவுக்கு கூட பணமில்லாமல் திண்டாடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Uththamapalaiyam ,taluka ,
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...