×

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆத்தூரில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

ஆறுமுகநேரி, ஜன.27: ஆத்தூரில் எஸ்டிபிஐ. கட்சி சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  திருச்செந்தூர் தொகுதி எஸ்டிபிஐ சார்பில் ஆத்தூரில் மாவட்ட தலைவர் சம்சுதீன் தேசிய கொடி ஏற்றினார். தெற்கு ஆத்தூரில் ஜமாஅத் தலைவர் ஹாஜி நூர்தீன் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.  திருச்செந்தூர் தொகுதி செயலாளர் கிதர் முகைதீன் தலைமை வகித்தார். ஆத்தூர் கிளை செயலாளர் சமது தொகுத்து வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட பொது செயலாளர் உஸ்மான், மாவட்ட செயலாளர் அஜீஸ், மாவட்ட பொருளாளர் கவுது மைதீன், தமுமுக மாவட்ட துணைத்தலைவர் மஜீத், ஆத்தூர் கிளை செயலாளர் மீரா சாகீப் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மைதீன்கனி, திருச்செந்தூர் தொகுதி தலைவர் அப்துல் ரகுமான் பேசினார். ஆத்தூர் கிளை பொருளாளர் சித்திக் நன்றி கூறினார்.

Tags : demonstration ,STPI ,Attur ,
× RELATED பரனூர், ஆத்தூர் உட்பட 29...