×

கோவில்பட்டி புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

கோவில்பட்டி, ஜன. 27: சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். , கோவில்பட்டி கோட்டாட்சியராக பணியாற்றி வந்த விஜயா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராக பணியாற்றிய சங்கரநாராயணன் இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் கோட்டாட்சியர் விஜயா பொறுப்புகளை ஒப்படைத்தார். இதில்  கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், தலைமை எழுத்தாளர் நிஷாந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Kovilpatti ,governor ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!