கீழக்கரை, ஜன.27: கீழக்கரையில் அனைத்து அரசு அலுவலகம் மற்றும் தனியார் பள்ளிகளில் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது. கீழக்கரை நகராட்சியில் ஆணையாளர் தனலட்சுமி தலைமையிலும், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வீரராஜா தலைமையிலும், அரசு மருத்துவமனையில் டாக்டர் துர்கா தேவி தலைமையில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தெற்கு தெரு இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உமர் அப்துல் காதர் களஞ்சியம், நாடார்பேட்டை சுப்பிரமணியன் ஜெயலட்சுமி நாடார் மெட்ரிக் பள்ளியில் பள்ளி தாளாளர் கஜேந்திரன், புதுதெரு நூரானியா நர்சரி பள்ளியில் மைபா சீனி அப்துல் காதர், முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக்கொடியேற்றினர். வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கல்வி குழு துணை தலைவர் முஹைதீன் இப்ராஹிம் கொடி ஏற்றினார். ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியை இந்திரா காந்தி கொடியேற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு, புதிதாக காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. யூனியன் அலுவலகத்தில் சேர்மன் ராதிகா பிரபு, தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கொடியேற்றினார்.