பரமக்குடி, ஜன.27: பரமக்குடியில் குடியரசு தினவிழா அனைத்து பள்ளி,கல்லூரிகளிலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தங்கவேலு, டி.எஸ்.பி. அலுவலகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில் வேல்முருகன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சிந்தாமணி முத்தையா தேசிய கொடி ஏற்றினர். போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுத் தலைவர் சத்யா குணசேகரன், நகராட்சி அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜாஜகான், ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் ஆயிரவைசிய சபை தலைவர் ராசி போஸ், சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, லயன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்க தலைவர் மோகன்தாஸ் கொடியேற்றி வைத்தனர்.
யாதவா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் ராமு யாதவ், பாரதியார் நடுநிலைப் பள்ளியில் தாளாளர் குணசேகரன், பொதுவக்குடி டி.இ.எல்.சி தொடக்கப்பள்ளி ஊராட்சி தலைவர் இளமுருகு இளஞ்செழியன், நெல்மடூர் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ், போகலூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன், செவ்வூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னாள், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மதலைவர் சரவணகுமார், கருங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சிவசுப்பிரமணியன், வேந்தோணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் குழந்தை ராணி துரைராசு, பெருங்கரை ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் முருகேசன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். சோமநாதபுரம் தேசிய நடுநிலைப் பள்ளியில் தாளாளர் சங்கர், காளிதாஸ் நடுநிலைப்பள்ளியில் தேவஸ்தான டிரஸ்டி நாகநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.