குடியாத்தம், ஜன. 27: குடியாத்தத்தில் அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய 3 தாலுகாக்களை உள்ளடக்கி புதிதாக ஒரு வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்தது. மேலும் இந்த வளாகத்தில் இ-சேவை மையம், ஆதார் சேவை மையம், பதிவாளர் அலுவலகம், தனி தாசில்தார் அலுவலகம் ஆகியவையும் இயங்கி வந்தது. பல்வேறு அலுவலகங்கள் ஒரே இடத்தில் இயங்கி வருவதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. மேலும் தற்போது உள்ள கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை கடந்த மாதம் நடைபெற்றது.