×

வாக்காளர் பட்டியலில் கூட இந்தி திணிப்பு ஐ.பெரியசாமி எம்எல்ஏ ஆதங்கம்

திண்டுக்கல், ஜன. 27: திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகிக்க, கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், முன்னாள் துணை சபாநாயகர் காஞ்சி ராஜன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர செயலாளர் ராஜப்பா, மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், துணை அமைப்பாளர்கள் சூசே ராபர்ட், வெள்ளி மலை, துரைபாண்டி, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘திமுக இல்லையென்றால் வடமொழியின் ஆதிக்கம் அதிகரித்து, தமிழ் என்ற சொல்லே இல்லாமல் போயிருக்கும். இந்தியை திணிக்க நினைக்கும் மத்திய அரசின் செயல்பாடு கனவு பலிக்காது. தமிழகத்தில் மொழிக்காக போராடிய தியாகிகளுக்கு கௌரவித்த ஒரே கட்சி திமுக தான். திண்டுக்கல்லில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் கூட இந்தியை திணித்துள்ளார்கள் இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். அதிமுக அமைச்சர்கள் பலரும் மீண்டும் திமுக ஆட்சி அமையும் எனக்கூறி வருகிறார்கள் இதுவே நிஜம். அதேபோல் ஊழல் ஆட்சியை தூக்கி எறிந்து திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால்தான் தமிழ்நாட்டுக்கு விடிவு ஏற்படும்’ என்றார். 

Tags : I. Periyasamy MLA ,
× RELATED ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர்...