×

காங்கயத்தில் பனிப்பொழிவுடன் மூடு பனி

காங்கயம், ஜன.27:காங்கயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அண்மையில் பரவலாக மழை பெய்து வந்தது. இதன்காரணமாக, காங்கயம் பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம்  பச்சை பசுமையாய் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை பனிப்பொழிவுடன் கூடிய மூடு பனி காணப்பட்டது. இதனால், அதிகாலை நேரத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் திணறினர். மேலும், எதிரே வரும் வாகனம் சரிவர தெரியாத அளவிற்கு மூடுபனி காணப்பட்டதால் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றனர். மேலும், இந்த பனியால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் மேல் பனி உறைந்து காணப்பட்டதால் கால்நடைகள் மேய்வதற்கு சிரமம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நேற்று பனிமூட்டம் காரணமாக வீட்டிலேயே முடங்கினர்.

Tags : Kangayam ,
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...