மஞ்சூர், ஜன.27: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலை கண்டிமட்டத்தை சேர்ந்தவர் புகழேந்திரன் (எ) சின்னவர் (35). இவரது தந்தை ராஜூ, தாய் லட்சுமி. சின்னவர் சொந்தமாக சொகுசு கார் வைத்து மஞ்சூர் பகுதியில் வாடகைக்கு இயக்கி வருகிறார். பொது சேவைகளில் நாட்டம் கொண்ட சின்னவர் டிரைவர் பணியுடன் பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். தனது சமூக பணிகளால் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் ஏராளமான மரங்கள் ரோட்டில் விழுந்தது. அப்போது சீரமைப்பு பணிக்காக சென்ற மஞ்சூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஜெயராமன் என்பவர் மீது ராட்சத மரம் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.