கோவை, ஜன. 27: கோவை தடாகம் சாலையில் உள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் கல்லூரியில் தேசிய நகர்ப்புற திறன் பயிற்சித் திட்டம் நடத்தும் “மொபைல் போன் ஹார்டுவேர் ரிப்பேர் மற்றும் டெக்னீசியன்” என்ற இலவச தொழிற்பயிற்சி முகாம் மகளிருக்கு வழங்கப்பட்ட உள்ளது. இது குறித்து கல்லூரியின் சேர்மன் டேவிட் கூறுகையில், ‘‘பிப்ரவரி 8ம் தேதி இந்த தொழில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்கான கல்வித் தகுதி எதுவும் இல்லை. 18 வயது முதல் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். செல்போன் துறையில் நல்ல அனுபவமும் தகுதியும் உள்ளவர்கள் பயிற்சி கொடுக்கவிருக்கின்றனர். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான கட்டணம், உபகரணங்கள், சீருடை இலவசமாக வழங்கப்படும்.