சென்னை: தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்த விவகாரத்தில் தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொடுங்கையூரை சேர்ந்த கோபியின் 5 வயது குழந்தை தனிஷ்காவுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமடைந்த நிலையில், மறுநாள் பரிதாபமாக இறந்தது. டாக்டர்களின் கவனக்குறைவால் தனது குழந்தை இறந்ததாகவும், எனவே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோபி மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.