சேலம், ஜன.26: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின், நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம், இத்தினம் குறித்து இணையவழி கருத்தரங்கு நடத்தப்பட்டது. துறையின் டீன் டாக்டர்.செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர்.மூர்த்தி கலந்துகொண்டு பேசினார். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என சுமார் 300பேர் கலந்து கொண்டனர். பின்னர் வாக்காளர் தினம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஏறபாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்.தனசேகர் மற்றும் வர்ஷினி சுவாதிப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.