திருச்சி, ஜன.26: டெல்லியில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வீரியப்படுத்த இன்று டிராக்டர் பேரணி அறிவித்துள்ளனர். இதில் டெல்லியில் நடக்கும் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு ெதரிவித்து தமிழகத்தில் அனைத்து விவசாய சங்கம் சார்பில் அந்தந்த மாவட்ட மாநகர பகுதியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தனர். இதில் மாவட்ட, மாநகர பகுதிகளில் டிராக்டர் பேரணிக்கு கலெக்டர்கள், எஸ்பிக்கள் தடை விதித்துள்ளனர். இதில் திருச்சி மாநகரில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கோரியுள்ளதற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு ஆட்சேபம் தெரிவித்த நிலையில், மாநகர கமிஷனர் ேலாகநாதன், டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளார்.