72வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது

திருச்சி, ஜன.26: 72வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகளை அனுமதித்து வருகின்றனர். மேலும் இன்று திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவு வாயில், கார் பார்க்கிங், பயணிகள் மற்றும் உறவினர்கள் வரும் கார்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பயணிகளின் உடமைகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுபோல் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும் மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரயில்வே மேம்பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் மாநகர கமிஷனர் உத்தரவின் பேரில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அனைத்து காவல் சோதனை சாவடிகளிலும் சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. அதுபோல் ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் எஸ்பி ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: