திருச்சி, ஜன.26: திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா இன்று காலை கொண்டாடப்படுகிறது. காலை 8.05 மணிக்கு கலெக்டர் சிவராசு தேசிய கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெறாது எனவும், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.