×

கடத்தி வந்த தங்கத்தை விழுங்கியவர் ஜிஹெச்சில் அட்மிட் திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

திருச்சி, ஜன.26:  துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த அசாருதீன்(22) என்ற வாலிபரை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவர் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. உடனே அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றனர். அதற்குள் அந்த வாலிபர் அந்த தங்கத்தை விழுங்கி விட்டார். இதையடுத்து அந்த வாலிபர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தங்கத்தை வெளியே எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

Tags : GH Admit Trichy Airport ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு