கலெக்டரிடம் கிராம மக்கள் மனு மணல் திருட்டு வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் திருச்சி சிறையில் அடைப்பு

தஞ்சை, ஜன.26: திருவையாறு அருகே மேலதிருப்பந்துருத்தி தெற்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் வினோத்(22). இவர் மீது மணல் திருட்டு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில், திருவையாறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தாக்கல் செய்த ஆணை யுறுதி ஆவணத்தின் அடிப்படையில் வினோத்தை குண்டர் சட்டத்தின் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து வினோத் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: