பொதுமக்கள் கோரிக்கை கபிஸ்தலம் அருகே குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்,பீதி வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாபநாசம், ஜன. 26: பாபநாசம் சுற்றுப்பகுதிகளில் பிடிபடும் குரங்குகளை கொள்ளிடக் கரையில் தான் கொண்டு வந்து விடுவர். கொள்ளிடக்கரையோரம் உள்ள திருவைக்காவூரில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. கொள்ளிடக் கரையோரமுள்ள குரங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. மாடுகள் தண்ணீர் அருந்தும் தொட்டியில் உள்ள தண்ணீரை வீணடிக்கின்றன. மாட்டு தீவனங்களை இறைக்கின்றன. ஓடு வீடுகள், கூரை வீடுகளை சேதப்படுத்துகின்றன. வீட்டின் கொல்லைப்புறம் செல்லும் குழந்தைகளை துரத்துகின்றன. கொல்லைப்புறமுள்ள கொய்யா, வாழை உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகின்றன. வீட்டிற்குள் புகுந்து உணவு பொருட்களை விரயமாக்குகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் அல்லது வனத்துறை அதிகாரிகள் குரங்குகளின் அட்டகாசத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: