×

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர்களுக்கு மின்னணு அடையாள அட்டை சப்-கலெக்டர் வழங்கினார்

அறந்தாங்கி, ஜன.26: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை அறந்தாங்கி சப்-கலெக்டர் மார்டின் லூதர்கிங் வழங்கினார். அறந்தாங்கியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கிய பேரணிக்கு அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் ஆனந்த்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பெரியகடைவீதி, தாலுகா அலுவலக சாலை, காந்தி பூங்கா சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. முன்னதாக வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சப்-கலெக்டர் ஆனந்த்மோகன் பரிசுகளை வழங்கினார். பேரணி முடிவில் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறந்தாங்கி போலீஸ் டிஎஸ்பி ஜெயசீலன், வருவாய்த்துறை, நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Sub-Collector ,voters ,occasion ,National Voter Day ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...