×

ேவண்டாமே இந்த விபரீத பயணம் வாக்காளர் தினத்தையொட்டி மூத்த வாக்காளருக்கு கலெக்டர் கவுரவம்

பெரம்பலூர்,ஜன.26: பெரம்பலூரில் 11வது தேசிய வாக்காளர் தினவிழாவை முன்னிட்டு கலெக்டர் வெங்கட பிரியா மூத்த வாக்காளரை கவுரவித்தார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் வெங் கட பிரியா தலைமையில் 11வது தேசிய வாக்காளர் தினவிழா நேற்று (25ம் தேதி) நடைபெற்றது. விழாவில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் முதல் 3 இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மேலும் தற்போது நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் மனு அளித்து வாக்காளர்களாக தங்களை இணைத்து கொண்ட இளம் வாக்காளர்களுக்கு புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்ப ட்டது. அதனைத் தொடர்ந்து 103 வயதான மூத்த வாக்காளர் வள்ளியம்மை என் பவருக்கு பொன்னாடை அணிவித்து, பழங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. முன்னதாக தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை கலெக்டர்  வெங்கட பிரியா வாசிக்க, அவரைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப் பையா, முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், தாசில்தார்கள் (தேர்தல் பிரிவு) துரைராஜ், சிவா, ஷாஜஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : collector ,voter ,Voter Day ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...