×

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 29ல் நடக்கிறது

பெரம்பலூர், ஜன.26: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 10 மணியளவில் காணொளிக் காட்சி மூலம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாய மேம் பாட்டிற்கான நலத்திட்டங் கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் தங்களது பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண் மை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் கலந்துகொண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காணொளிக் காட்சி மூலம் தங்களது குறைகைளை தெரிவிக்கலாம்.
மேலும் கொரோனா தொற்று காரணமாக விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தவிர வேறு வட்டார அலுவ லகத்திற்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் வெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...