×

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று டிராக்டர், டூவீலர் பேரணிக்கு தடை மீறினால் சட்டப்படி நடவடிக்கை

பெரம்பலூர்,ஜன.26:பெரம் பலூர் மாவட்டத்தில் குடியரசு தினமான இன்று (26ம்தேதி) சட்ட விதி முறை களைமீறி டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடத்தினால் சட்டப்படி நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும்என பெரம்பலூர் மாவ ட்ட எஸ்பி நிஷா பார்த்தி பன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப் பில் தெரிவித்திருப்பதாவ து: புதிய வேளாண் சட்டங்களு க்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று டிரா க்டர் மற்றும் இருசக்கர வா கன பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதன்படி இன்று (26ம்தேதி) எவ்வித பேரணிகளையும் பெரம்ப லூர் மாவட்டத்தில் நடத்த அனுமதி கிடையாது. கொ ரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கருத்தில் கொண் டு மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகிற வகையில் பேரணி நடத்தினால் சட்டப் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனை மீறி பேரணி நடத்தினால் மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்குகள் பதிவு செய் யப்பட்டு, பேரணிக்கு பயன் படுத்திய வாகனங்கள் பறி முதல் செய்யப்படும் என எஸ்பி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : rally ,Perambalur district ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி