வேதாரண்யம், ஜன. 26: வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மொழிப்போர் தியாகிகளின் படத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அறங்காவலர் குழுத்தலைவர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நமசிவாயம் உள்ளி–்ட்ட பலர் பங்கேற்றனர்.