தம்பியிடம் ஒப்படைப்பு மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை

மயிலாடுதுறை, ஜன. 26: 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவை போற்றும் விதமாக ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகியான மயிலாடுதுறையை சேர்ந்த சாரங்கபாணி நினைவாக மன்னம்பந்தல் அருகே நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது, அந்த தூணுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் திமுகவினர் திரண்டு மலர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையிலும் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் கட்சி பொறுப்பாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: