கரூர் திண்ணப்பாகார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் வாகனஓட்டிகள் வலியுறுத்தல்

கரூர், ஜன. 26: கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். கரூரில் இருந்து வாங்கல், நெரூர், சோமூர், நாமக்கல் மற்றும் மோகனு£ர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திண்ணப்பா கார்னர் வழியாக சென்று வருகின்றன. இந்த கார்னர் பகுதியின் வழியாக, செங்குந்தபுரம், சேலம் பைபாஸ் சாலை, ராமகிருஷ்ணபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் எதிர்ப்புறமாக உள்ள சாலையின் வழியாக சென்று வருகின்றனர். வாகன குறுக்கீடு காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தேவையான நிரந்தர ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்து எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: