க. பரமத்தி, ஜன. 26: க.பரமத்தி ஒன்றியம் நெடுங்கூர் அருகே லட்சுமி புரத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு விட்டு மாலையில் பாதுகாப்பாக சாலையோரம் ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 ஆடுகளும் படுகாயமடைந்து பலியானது. மேலும் இரண்டுக்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. காயமான ஆடுகளுக்கு கால்நடை மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.