மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அண்ணாசிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கரூர், ஜன. 26: கரூர் மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மனோகரா கார்னர் பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி, மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் 100க்கும் மேற்பட்டோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

Related Stories: