×

கலெக்டர் வழங்கினார் கரூர் வாங்கல் சாலை விரிவாக்க பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

கரூர், ஜன. 26: கரூர் வாங்கல் சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கரூரில் இருந்து வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வாங்கல் சாலையில் செல்கிறது. சாலையில் அதிகளவு போக்குவரத்து நடைபெற்று வருவதால் சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.இதில், ஒரு சில பகுதிகளில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முழுமையடையாமல் உள்ளது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பீதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : road ,Karur Vangal ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...