×

லாரி மோதி வாலிபர் பலி

திருச்சுழி, ஜன. 26: திருச்சுழி அருகே உள்ள குள்ளம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் தங்கப்பாண்டி(33). இவர் பெயிண்டரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அருப்புக்கோட்டையில் பணியை முடித்து விட்டு தனது ஊருக்கு திரும்பும்போது மல்லம்பட்டி அருகே வரும் போது முசிறியைச் சேர்ந்த ராசு மகன் அவுளி லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது கல்லூரணியிலிருந்து அருப்புக்கோட்டையை நோக்கி வரும்போது டூவீலரில் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி பலியானார்.

Tags : Larry Moti Walipur ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி