×

ஊர்வலம் நடத்தினால் டிராக்டர்கள் பறிமுதல்

விருதுநகர், ஜன.26: விருதுநகர் மாவட்ட எஸ்பி பெருமாள் தகவல்: மாவட்டத்தில் ஜன.26ல் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் டிராக்டர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : procession ,
× RELATED தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம்